சிபிஎஸ்இ +2 தேர்வு மதிப்பெண்கள் – 2 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!!

0

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும்; மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எந்த விதிமுறையின் அடிப்படையில் வழங்கப்படும்  என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

சிபிஎஸ்இ +2 தேர்வு மதிப்பெண்கள்:

கொரோனா 2ஆம் அலை காரணமாக சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகள் குறித்து முடிவெடுக்காமல் இருந்த நிலையில், சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் தலைமையில் நடப்பாண்டிற்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மாணவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்று எண்ணி; சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகளை இந்த ஆண்டு ரத்து செய்வதாக அறிவித்தது. இருந்த போதிலும், சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து குறித்து மத்திய அரசுக்கு  உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

என்ன விதிமுறைகள் அடிப்படையில் மதிப்பீடு செய்ய திட்டம் என்ற அறிக்கை அளிக்க ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்கப்படும் என்றும், மதிப்பெண் வழங்குவது குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here