தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது தமிழக தலைமை செயலகத்திற்கு சென்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.
சூப்பர் ஸ்டார்:
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் செம பிசியாக இருந்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டடத்தை நெருங்கியுள்ளது. மேலும் இவர் சில தினங்களுக்கு முன்பு தான் ஐதராபாத்தில் இருந்து படப்பிடிப்பு முடிந்து சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் காரணமாக வருகிற மே 31ம் தேதி வரை படப்பிடிப்பு நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் தற்போது அனைத்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்கான நிதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல தரப்பு மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களால் இயன்ற நிதிகளை அரசிற்கு வழங்கி வருகின்றனர்.தற்போது அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைமை செயலகத்திற்கு சென்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்தை வழங்கியுள்ளார். தற்போது இதற்கு பல தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.