நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியை குறித்து மேடையில் பேசியது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த காலத்தில் இருந்து தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற கிரீடத்தை தலையில் வைத்திருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் இருக்கும் வாணி மகாலில் ரஜினி மனைவியின் நெருங்கிய சொந்தமான ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை பார்த்து வியந்து போனார். அப்போது மேடையில் பேசிய ரஜினி இந்த நாடகம் கண்டிப்பாக திரைப்படமாக உருவாகும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி தனது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து சில வார்த்தைகள் பேசியுள்ளார்.
இது நடந்து ஒரு வருஷமாச்சு., இது நடந்தா, உடனே Open up பண்ணிடுவோம்! பசங்க பட கிஷோர் ஓபன் டாக்!!
அவர் பேசியதாவது, நான் நடிக்க வருவதற்கு முன்பு பஸ் கண்டக்டராக பணிபுரிந்த வேளையில் நான் எத்தனை பாக்கெட் சிகரெட் குடிப்பேன் என்று எனக்கே தெரியாது. மாமிசமும், குடியுமா சுற்றி திரிந்த என்ன அன்பால திருத்துனது என்னுடைய லதா தான். கெட்ட நண்பர்களிடம் இருந்து என்னை பிரித்து, ஒழுக்கமாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றியது என் மனைவி தான் என்று கூறியுள்ளார்.