ஆஸ்திரேலிய அணிக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்கும் இந்தியா – சுனில் கவாஸ்கர் விமர்சனம்!!

0

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் அடிலெய்டில் தங்களது முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. நேற்றைய போட்டியில் இந்திய அணி பல கேட்சுகளை தவறவிட்டது. இதனை சுனில் கவாஸ்கர் ‘ஆஸ்திரேலிய அணிக்காக இந்தியா அணி கேட்சுகளை தவற விட்டு தங்களது கிறிஸ்துமஸ் பரிசை கொடுக்கின்றனர்’ என்று விமர்சித்துள்ளார்.

இந்தியா vs  ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி அடிலெய்டில் முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. முதலாவது போட்டி மட்டும் பகலிரவு போட்டியாக நடைபெறும். இந்நிலையில் டாஸ் வென்ற இந்தியா கேப்டன் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா தனது முதலாவது இன்னிங்சில் 244 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்து  களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பும்ராஹ் மற்றும் அஸ்வின் பந்து வீச்சை சமாளிக்க  முடியாமல் 191 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியாவின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனை முன்னால்   இந்தியா அணி வீரரான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!


ஆஸ்திரேலிய  அணிக்கு கிறிஸ்துமஸ் பரிசு:

சுனில் கவாஸ்கர் கூறியதாவது ” நேற்றைய போட்டியில் இந்தியா அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக  இருந்தது. சுமார் நான்கிற்கும் மேற்பட்ட கேட்சுகளை இந்தியா அணி தவறவிட்டது. விக்கெட் கீப்பர் சாஹா, மற்றும் ப்ரித்வி ஷா மிகவும் மோசமாக செயல்பட்டனர்.  பௌலிங்கில் அசத்திய பும்ராஹ் பீல்டிங்கில் சொதப்பினார். இது ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் பலமாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் அவரின் 3 கேட்சுகளை இந்தியா அணி தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணி கிறிஸ்துமஸ் கொண்டாடும் முனைப்பில் உள்ளார்கள்.  அதனால் தான் தங்களது பரிசாக கேட்சுகளை ஆஸ்திரேலிய அணிக்கு பரிசாக கொடுத்துள்ளார்கள்” என்று கடுங் கோபத்தோடு விமர்சித்துள்ளார்.

சிட்னியில் வேகமெடுக்கும் கொரோனா, 3வது IND vs AUS டெஸ்ட் நடைபெறுமா?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

அதன்பின் இந்தியா அணி தனது 2வது  இன்னிங்ஸை துவக்கியது. இதிலும் ப்ரித்வி ஷா 4 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்து மீண்டும் ஏமாற்றினார். அதன்பின் யாரும் எதிர்பார்க்காத வகையில் 3 வது பேட்ஸ்மேனாக பும்ராஹ் களமிறங்கினார். இது அனைவரையும் அதிர்ச்சி அடையச்செய்தது. இதனை சுனில் கவாஸ்கர் கலாய்த்துள்ளார். அவர் கூறியதாவது ” 40  வருடங்களுக்கு பின் தன் பேரப்பிள்ளைகளிடம் இந்தியா அணிக்காக நான் 3 வது பேட்ஸ்மேனாககளமிறங்கி விளையாடினேன் என்று பெருமையாக கூறுவார், ஆனால் எந்நிலையில் களமிறங்கினார் என்பதை கூறமுடியாது ” என்று கலாய்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here