சுந்தரி சீரியல் இப்பொழுது பல விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது அசம்பாவிதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது சுந்தரி இப்பொழுது தான் உயிர் பிழைத்து வந்துள்ளார். கார்த்திக் நிஜமாகவே திருந்தி விட்டாரா?? இல்லை என்ற குழப்பத்துடன் தான் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது.
எப்படியோ கிருஷ்ணாவும், மாலினியும் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசம் என்றே சொல்லலாம். இப்படி இருக்க மாலினியை திருமணம் செய்ய இருந்த வில்லன் அருண் இப்பொழுது உக்கிரமாக கிருஷ்ணாவை கொல்ல வெறிகொண்டு இருக்கிறார்.
இப்படி இருக்க ஊருக்கு வந்திருக்கும் சுந்தரி, மாலினி, கார்த்திக், கிருஷ்ணா அனைவரும் சேர்ந்து அவுட்டிங் வர அப்பொழுது இதுதான் சமயம் அருணும் அங்கே வர கிருஷ்ணா தனியாக இருப்பதை பார்த்து கத்தி எடுத்து குத்த வருகிறார். ஒரு பக்கம் கார்த்திக் ஓடி வர இன்னொரு பக்கம் மாலினியின் அப்பா ஓடி வர எதிர்பக்கம் மாலினியும் சுந்தரியும் காப்பாற்ற ஓடி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கிருஷ்ணாவை குத்த வரும் நேரத்தில் சுந்தரி வந்து தடுத்து அருணை அதே கத்தியால் குத்துகிறார். இதனால் அனைவரும் ஷாக்காகி நிற்கின்றனர். இதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.
View this post on Instagram