பிரபல சன் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி – குவியும் வாழ்த்துக்கள்!!

0

சின்னத்திரையில் “சுந்தரி” எங்கிற சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா. டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் சினிமாவில் முதன் முறையாக ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.

நடிக்கும் ஆர்வம் எப்படி வந்தது?

திருச்சிக்கு அருகில் உள்ள அல்லித்துறையை சேர்ந்தவர். இவருடைய அப்பா அம்மா இருவருமே பள்ளி தலைமை ஆசிரியர்கள். படிப்பைவிட தொலைக்காட்சி பார்ப்பதில் தான் பெரும் ஆர்வத்துடன் இருந்தார். கேபிக்கு சிறுவயதிலிருந்தே திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே விருப்பம். கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் எண்ணெற்ற நபர்களுக்கு சினிமாவிலும் நுழைந்து இருக்கின்றனர். அந்த வகையில் சின்ன திரை மற்றும் வெள்ளித்திரையில் கால் பதித்தவர் கேப்ரில்லா.

கேபிக்கு நடிகை மனோரமா மற்றும் காமெடி நடிகர் வடிவேல் தான் இன்ஸ்பிரேஷன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிறகு படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் மீண்டும் குறும்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன் பிறகு நயன்தாரா கதாநாயகியாக நடித்து வெளிவந்த ஐரா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்பொது அவருக்கு சன்டிவியின் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றியும், அவள் தனது கனவை அடைய எப்படி போராடுகிறாள் என்பதை மையப்படுத்தியும் சீரியலின் கதை அமைந்துள்ளது.

இதை தொடர்ந்து கேப்ரில்லா அடுத்ததாக N4 என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் லோகேஷ் இயக்குகிறார். படத்தில் நாயகனாக கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமான மைக்கேல் நடிக்கிறார்.

சினிமாவில் சாதிப்பதற்கு பெண்களுக்கு நிறம் ஒரு தடை இல்லை என்பதற்கு கேப்ரில்லா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here