சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் TRP-ல் கலக்கி வருகிறது. மேலும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்று வருவதற்கு முக்கிய காரணம் சீரியலின் கதைக்களம் தான். ஏனென்றால் சாதாரண கிராமத்தில் பிறந்து, கலெக்டர் ஆக வேண்டும் என லட்சியத்தில் இருக்கும் சுந்தரி என்ற பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக கல்யாணம் ஆகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த கல்யாண வாழ்க்கையும் அவருக்கு சரியாக அமையவில்லை. மேலும் சுந்தரியின் கணவர் கார்த்திக், வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இதை எல்லாம் தெரிந்து பல பிரச்சனைகளை தற்போது எதிர் கொண்டு வரும் சுந்தரி தனது லட்சியத்தில் ஜெயிப்பாரா என்ற நோக்கில் தான் கதை நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல், தற்போது வெற்றிகரமாக 500 வது எபிசோடில் வரும் வியாழக்கிழமை கால் எடுத்து வைக்கிறது. இதை சிறப்பிப்பதற்கு வரும் வியாழக்கிழமை single சாட்டில் கட் இல்லாமல் சீரியல் ஒளிபரப்பப்பட உள்ளதாக சன் டிவி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் சுந்தரி சீரியல் டீமுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.