சன் டிவி ரோஜா சீரியல் பாதியில் நிறுத்தம்?? ஷாக்கான ரசிகர்கள்!!

0

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்பொழுதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றே சொல்லலாம். வெள்ளித்திரையை விட சின்னத்திரைகளுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். இந்நிலையில் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் திருத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவி சீரியல்

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எப்பொழுதுமே உண்டு. அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்து இல்லத்தரசிகளுக்கு விருப்பமான ஒன்று. பல காலமாகவே சீரியல் என்றாலே அது சன் டிவி தான். மேலும் மெட்டிஒலி, சித்தி போன்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகவே இருந்தது. இப்பொழுது தான் பல சேனல்களில் சீரியல் என்பது உருவானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனாலும் சன் டிவிக்கு எப்பொழுதுமே தனி மதிப்பு தான். அதுவும் 8 மணி சீரியல் அனைவரும் பார்க்க கூடிய ஒன்று. இந்த லாக்டவுன் காரணமாக பல சீரியல்கள் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் பலரும் கவலையில் ஆழ்ந்தனர் என்றே சொல்லலாம். தற்போது சன் டிவியில் முன்னணி சீரியலாக விளங்குவது சித்தி 2, ரோஜா மற்றும் பாண்டவர் இல்லம் போன்றவை ஆகும்.

இந்நிலையில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த சீரியலான கல்யாண வீடு நிறுத்தப்பட்டது அதிர்ச்சியான ஒன்று தான். இந்நிலையில் ரோஜா சீரியலும் நிறுத்த போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அந்த சீரியல் ரசிகர்கள் இதனை நிறுத்த கூடாது என்று கேட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த சீரியல் தரப்பில் இருந்து இது வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த ரோஜா சீரியல் 1500 எபிசோடு வரை கட்டாயமாக இயக்கப்படும் என்றும் இதனை நிறுத்த வாய்ப்புகள் இல்லை என்றும் சீரியல் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனை கேட்டவுடன் தான் ரசிகர்கள் அமைதியாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here