முழு ஊரடங்கு காரணமாக சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் சன் டிவி யில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் இனி ஒரு மணி நேரம் என தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்து ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
தற்போது இருக்கும் சூழலில் சீரியல் தான் மக்களின் வாழ்வில் இன்றியமையாததாகி விட்டது. பொழுதை கழிக்க என்ன செய்வதென்று தெரியாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியல் பார்ப்பதையே விரும்புகின்றனர். இதனால் சன் டிவி, விஜய் டிவி என அனைத்து சேனல்களும் புது புது சீரியல்களை வழங்குகின்றனர்.
கடந்த வருடம் கொரோனா முதல் அலை பரவிய போது அனைத்து சின்னத்திரை, பெரியதிரை என அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. அப்பொழுது தான் சன் டிவி 90ஸ் கிட்ஸ் ன் பிடித்தமான மெட்டி ஒலியை மறு ஒளிபரப்பு செய்தது. மெட்டி ஒலி சன் டிவி யில் 1 மணிக்கு கடந்த ஒராண்டாக ஒளிபரப்பானது. இந்த நிலையில் மக்கள் இந்த தொடரை ரசித்து பார்த்து வந்தனர்.
தற்போது மீண்டும் கொரோனா 2 ம் அலை பரவலால் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. எனவே சீரியல்கள் அனைத்தும் மறு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளது. பல சீரியல்களின் நேரத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்க மெட்டி ஒலி சீரியல் வரும் திங்கள் முதல் 12.30 மணிக்கே அதாவது 1.30 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தகவலினால் மெட்டி ஒலி சீரியல் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.