சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி சீரியல் 500 எபிசோடுகள் கடந்து சாதனை படைத்துள்ளதை அடுத்து, ரசிகர்கள் இந்த சீரியல் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சாதனை படைத்த சீரியல்:
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கியமான தொடர் மகராசி. கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது வரை விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதையம்சம் என்னவென்றால் நாயகி வெளி மாநிலத்தில் பிறந்து வளர்ந்து வருகிறார்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்த கதையின் நாயகன் தமிழை சந்திக்கிறார். எதிர்பாராத விதமாக தமிழின் மனைவியாக நடிக்க வேண்டிய சூழல் இந்த தொடரின் நாயகிக்கு ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் தனது புகுந்த வீட்டிற்கு இவர் உண்மையான மருமகள் இல்லை என்ற செய்தி எப்படி தெரிய வருகிறது.
இவர்களுக்கு க்குள் இருக்கும், அந்த மர்மத்தின் பின்னணி என்ன என்பது குறித்த முக்கிய கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இது தற்போது 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்