நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “சுல்தான்” திரைப்படம் இன்று நேரடியாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அந்த திரைப்படம் குறித்து மக்களும் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சுல்தான் திரைப்படம்
நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பிலும் இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் “சுல்தான்” திரைபடம் இன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. பிறக்கும் போதே போதே தனது தாயை நடிகர் கார்த்தி (அதாவது சுல்தான்) இழந்து விடுகிறார். இதனால் அவரை முரட்டுத்தனமான அடியாட்கள் தான் வளர்க்கின்றனர்.
பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று – கவலையில் ரசிகர்கள்!!
கார்த்தியின் பேச்சுக்கு அனைவரும் கட்டுப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் அனைவரையும் நல்ல முறையில் மாற்ற கார்த்தி நினைக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, கார்ப்பரேட் நிறுவனத்தின் பிடியில் சிக்கும் தனது ஊரை காப்பாற்றவும் நினைக்கிறார். இதனால் தன்னை வளர்த்த அனைவரையும் கார்த்தி திருத்துவரா?? அதே சமயம் தனது ஊரை காப்பாற்றுவாரா?? என்பது தான் மீதி கதை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஒட்டுமொத்த மசாலா கலவையுடன் திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. விவேக் – மெர்வின் கூட்டணியில் அமைந்திருக்கும் பாடல்கள் அனைத்தும் கிளாஸ். அதே போல் பின்னணி இசை கதைக்களத்திற்கு தகுந்தவாக்கில் அமைத்துள்ளார் யுவன். கார்த்தி அனைத்து காட்சிகளிலும் அல்டிமேட். அதே போல் ராஷ்மிகா கதையில் ஒன்றி நடித்திருக்கிறார். அனைத்தும் நன்றாக இருந்தாலும் யூகிக்க கூடிய காட்சிகளுடன் திரைக்கதை அமைந்திருப்பதால் “சுல்தான்” வழுக்கி இருக்கிறது.