உலக நாடுகளில் சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா 2ம் இடத்திற்கு முன்னேறியதால் வெளிநாடுகளுக்கும் சர்க்கரையை ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது நாட்டில் நிலவும் மோசமான உறைபனியால் கரும்பு உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது கடந்த ஆண்டு 13.8 மில்லியன் டன் உற்பத்தியில் இருந்து 12.8 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. மேலும் கரும்பு உற்பத்தியில் முன்னிலை மாநிலங்களான மகாராஷ்டிரா, உத்திர பிரதேசங்களிலும் இம்முறை குறைந்த அளவிலே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த பெரும் இழப்பால் பிரேசில், தாய்லாந்து நாடுகளில் சர்க்கரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 45 to 60 நாட்களுக்கு முன்னதாகவே சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரைப்பதை நிறுத்த உள்ளதாக ஆணையர் சேகர் கெய்க்வாட் கூறியுள்ளார்.