நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வருமானங்களுக்கு ஏற்ப மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் குடும்ப அட்டை விநியோகப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி இருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் பெரும்பாலான பகுதிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு நாள் அரிசி, மறுநாள் பருப்பு என தங்கள் இஷ்டத்துக்கு நுகர்வோர்களை அலைய வைக்கின்றனர். சில நேரங்களில் மின்னணு இயந்திரம் பழுது என்று காரணம் காட்டி பொருட்களை விநியோகிக்க மறுக்கின்றனர். இந்நிலையில் கேரளாவில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரேஷன் பயனர்களே உஷார்., இந்த தவற செஞ்சா, இனி ரேஷன் பொருட்கள் கட்! அரசு அறிவிப்பு!!
அதாவது மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிற அட்டைதாரர்கள் இதுபோன்ற காரணங்களால் அலைக்கழிக்கப்பட்டால் மாவட்ட உதவி ஆட்சியரிடம் புகார் மனு சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த மனுதாரர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடுத்த 3 வாரத்திற்குள் தகுந்த உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளனர்.