ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு பல திட்டங்கள் செவ்வனே அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்ப்பிணி பெண்களின் நிதி சுமைகளை குறைக்கும் வகையில் மத்திய அரசு நலத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில் பதிவு செய்யும் கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5,000 டெபாசிட் செய்யப்படும். இத்திட்டம் பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் தினக்கூலி பெண்களுக்கு மட்டுமே செயல்படும். மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு செயல்படாது.
ஐயோ., இது என்ன dress பூனம்., இப்படி உச்சகட்ட கவர்ச்சி காட்டி இளசுகளை இப்படி கிறங்கடிக்குறிங்களே!!
இந்த தகுதிகளை வைத்து தேர்ந்தெடுக்கப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பதிவு செய்யும் போது ரூ.1,000, ஆறு மாத கர்ப்ப காலத்திற்கு பிறகு ரூ.2,000, குழந்தை பிறந்தவுடன் ரூ.2,000 என மூன்று தவணைகளாக வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படும். பிறக்கும் குழந்தை உயிருடன் இருந்தால் மட்டுமே இத்திட்டத்தின் முழு பலன்கள் கிடைக்கும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.