அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலக பணிகளில் பணியாற்றுபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசு வழங்கி வருகிறது. அதன்படி இஸ்லாமிய மதத்தால் அங்கீகரிக்கப்பட்ட வக்பு வாரியம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள கல்வி நிலையம், மருத்துவமனை, பள்ளிவாசல் என அனைத்து துறைகளிலும் பணிபுரியும் உலமாக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மானியம் வழங்குகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவன மக்களுக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதற்கான தகுதியாக 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ள உலமாக்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டு பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லையா? அப்போ இந்த நியூஸ் உங்களுக்கு தான்!!!
மேற்கண்ட தகுதியுடையவர்கள் வாகன உரிமம், ஆதார், ஜாதிச்சான்று, வருவாய் என உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.