+2 பொதுத்தேர்வை நடத்த 60% ஆதரவு – தமிழக அரசு தெரிவித்துள்ளது!!!!

0

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்த 60% கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

+2 பொதுத்தேர்வை நடத்த 60% ஆதரவு:

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு மே 5 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனா 2ம் அலையின் அச்சுறுத்தல் காரணமாக 2 முறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் 12ம் வகுப்பு பொதுதேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் கூறியிருந்தார். மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்த 60% கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், கொரோனா முடிவுக்கு வந்த பின் பொதுத்தேர்வை எப்படி நடத்தலாம் என்றும் எப்போது நடத்தலாம் என்றும் முதல்வருடன் ஆலோசனை நடத்தினார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here