தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்த 60% கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
+2 பொதுத்தேர்வை நடத்த 60% ஆதரவு:
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு மே 5 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனா 2ம் அலையின் அச்சுறுத்தல் காரணமாக 2 முறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் 12ம் வகுப்பு பொதுதேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் கூறியிருந்தார். மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்த 60% கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், கொரோனா முடிவுக்கு வந்த பின் பொதுத்தேர்வை எப்படி நடத்தலாம் என்றும் எப்போது நடத்தலாம் என்றும் முதல்வருடன் ஆலோசனை நடத்தினார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!