தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்தததை தொடர்ந்து, பலரும் கல்வி கடன்களுக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக சிறப்பு கல்வி கடன் முகாம்களை ஏற்படுத்தி உள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார். இதன் முதல் கட்ட முகாம் நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்றது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதில் 39 மாணவர்களுக்கு ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. இதோடு 37 மாணவர்களுக்கு புதிய கல்விக் கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து 2ஆம் கட்ட சிறப்பு முகாம் நாளை மறுநாள் (செப்டம்பர் 8) காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். பயன்பெற ஆர்வமுள்ள மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
பயணிகளுக்கு குட் நியூஸ்.., இந்த நாளில் சிறப்பு பேருந்து இயக்க முடிவு.., வெளியான அறிவிப்பு!!!