நாடு முழுவதும் கல்வி நிலையங்கள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை அத்தியாவசியமாகி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் எளிதாக பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு மட்டும் ஆதார் எண் இல்லாமல் அபார் எண் அறிமுகப்படுத்தலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த அட்டையில் மாணவர்களின் கல்வி விபரம், கூடுதல் திறமை போன்றவை இடம்பெறும் வகையில் “தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு” என்ற “அபார்” அமைய உள்ளது. இந்த விவரங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை கொண்டு தயாரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் தமிழகத்தில் பெற்றோர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே, இத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியாளர்கள் பேசி வருகின்றனர்.
தமிழக மாணவர்கள் கவனத்திற்கு.., இந்த தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு.., வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!!