மாணவனின் வெறிச்செயல் – பல்கலையில் 8 மாணவர்களை சுட்டுக்கொன்ற கொடூரம்!!

0

ரஷ்ய பல்கலையில் மாணவர் ஒருவர் தன் சக வகுப்பு மாணவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மாணவனின் வெறிச்செயல்:

ரஷ்யாவில் பெர்ம் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் பரிதாபமான செயல் ஒன்று நடந்துள்ளது.  அதாவது, இந்த பல்கலையில் உள்ள வகுப்பறையில் இருந்த மாணவர் ஒருவர் அங்கிருந்த சக மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.  இதில் 8 மாணவர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர்.

மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.  இந்த பதற்றத்தால், பல மாணவர்கள் கட்டிடத்திலிருந்து தப்பிக்க முதல் மாடியின் ஜன்னல்களில் இருந்து குதித்ததில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.  ஆனால், அவர் ஏன் இப்படி செய்தார் என்ற விவரம் இனி தான் தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here