தமிழகத்தில் மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களையும், சலுகைகளையும் மின் துறை வாரியம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி 100 யூனிட்குள் ஓடினால் இலவச மின்சாரமும், 500 யூனிட் வரை ஓடினால் மானிய விலையிலும் மின்சாரமும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மின் துறை வாரியம் மக்களுக்கு பல திட்டங்களை அறிவித்தாலும், அதில் பணிபுரியும் சில அதிகாரிகள் பொதுமக்களை லஞ்சம் கேட்டு துன்புறுத்தியும் வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த வகையில் தற்போது வீடுகளுக்கு மின் சேவை இணைப்பு வழங்குவதற்கு மின் துறை அதிகாரி, ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக மின் துறை வாரியத்துக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை விரைந்து விசாரித்த தமிழ்நாடு மின்சார வாரியம் அந்தந்த மாவட்ட தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
விஷ்ணு விஷால் 2வது மனைவி இளம் வயசுல எப்படி இருக்காங்க.., ஷாக் புகைப்படம் உள்ளே!!
அதாவது இனி பணியில் உள்ள அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் ஆதாரத்துடன் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை குறித்து விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள், சரியான முறையில் வழக்கை விசாரித்து எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.