கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகம் இருப்பதால் அதனை சரிசெய்ய உயர்நீதிமன்றத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிப்பதற்காக மட்டும் மீண்டும் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 15 முதல் உற்பத்தி செய்ய உத்தரவு…
தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நீதிமன்றத்தால் மக்களின் நலன் கருதி மூடப்பட்டது இப்பொழுது கொரோனா இரண்டாம் அலையினால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது இதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பது காலதாமதமாகும் என்று கூறி வருவதால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்குகளை விசாரித்தது
அதில் தமிழக அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி கட்டுப்பாடுகள் குறித்தும் ஊரடங்கு பற்றியும் விளக்கம் அளித்து ஊரடங்கும் காலங்களில் தொற்று குறைய வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார் தற்போது ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான பணிகள் அனைத்தும் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது வரும் 15ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி தொடங்கும் ஒரு நாளைக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் என கூறியது. தமிழகத்திற்கு தேவை இருப்பதால் 419 டன் ஆக்சிஜன் மட்டுமே தமிழகத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மூன்றாவது அறை தாக்கும் இருப்பதால் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் இரண்டாம் நிலையை விட மூன்றாம் அலை தாக்கம் அதிகம் இருப்பதால் இப்பொழுது இருக்கும் நிலமையை விட மோசமான நிலை வராமல் இருக்க மத்திய அரசும் மாநில அரசும் செயல்பட வேண்டும்.