சிக்கிம் மாநிலத்தின் ரவங்கலா பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டதால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
பீதியில் மக்கள் :
உலகம் முழுவதும் பெருந்தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கொரோனா வைரஸின் 3ம் அலை பரவல் தீவிரம் எடுத்து விட்டதாக உலக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த பெருந்தொற்று ஒருபுறமிருக்க பல்வேறு இயற்கை சீற்றங்கள் அடிக்கடி ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது. அதன்படி, சிக்கிம் மாநிலத்தின் ரவங்கலா பகுதியில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
தெற்கு சிக்கிமின் ரவங்கலா பகுதியின் 12 கிலோ மீட்டர் தொலைவில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவானதாக தகவல் கிடைத்துள்ளது. இருந்தாலும், இந்த நிலஅதிர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்