தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று முக்கிய ஆலோசனை – மாநில தேர்தல் ஆணையம் முடிவு!

0

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது குறித்து முக்கிய அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

முக்கிய ஆலோசனை:

தமிழகத்தில்  நடத்தப்படாமல் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில், தற்போது ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசும், தங்கள் தேர்தல் வாக்குறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்து இருந்தனர்.  இதையடுத்து தமிழகத்தில் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் தேர்தல் குறித்த  முக்கிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.


அதாவது, மாநகராட்சி, ஊராட்சி சார்ந்த தேர்தல்கள் இன்னும் நடத்தப்படவில்லை. இதற்கு முன், கடந்த டிசம்பரில் புதிதாக உதயமான 9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  இது குறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் செப்டம்பர் இரண்டாவது வாரத்திற்குள் எஞ்சியுள்ள மாவட்டங்களில், ஊரக அமைப்பிற்கான உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், இது சார்பாக வாக்காளர் பட்டியலை கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  இந்த பட்டியல் கடந்த மார்ச் மாதம் 31 ம் தேதி  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலை வைத்து தயாரிக்கப்பட்டது. எனவே, இதில் குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று மதியம் 12 மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.  இதனால், விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here