“திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது”.! ஸ்டாலின் கண்ணீர் பேட்டி!

0

திமுக பொது செயலாளர் க. அன்பழகன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் அவர் மறைவையொட்டி இரங்கல் கவிதை ஒன்றை எழுதி உள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்

திமுக பொது செயலாளர் க.அன்பழகன் கடந்த மாதங்களாக உடல் நலம் குன்றிய காரணத்தால் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு வயது 98 ஆனா நிலையில் உடல் நலம் இன்றி சேர்க்கபட்டார். தற்போது சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். இன்று அதிகாலை 1 மணிக்கு உயிர் இழந்ததாக தெரிவிக்க பட்டது.

ஸ்டாலின் இரங்கல் கவிதை


இதையடுத்து ஸ்டாலின் திமுக பொது செயலாளர் க.அன்பழகன் மறைவிற்கு இரங்கல் கவிதை எழுதியுள்ளார்.

“திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது. சங்கப் பலகை சரிந்துவிட்டது! இனமான இமயம் உடைந்துவிட்டது. எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்! என்ன சொல்லித் தேற்றுவது? எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை” என்று கூறி அதையடுத்து பேராசிரியருக்கு தாமுக்குமான உறவை கவிதையாக படைத்திருந்தார். “பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்! முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்! எனது சிறகை நான் விரிக்க வானமாய் இருந்தவர்! என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here