மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமரை வலியுறுத்தி உள்ளார்.
27 சதவீத இட ஒதுக்கீடு
மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என விரும்புகிறது. 27 சதவீத ஒதுக்கீட்டில் 50 சதம் கூட நிரப்பப் படவில்லை. மருத்துவக் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர் வஞ்சிக்கப் படுகின்றனர்.
இதையும் படியுங்கள் ⇒⇒‘கோலியைக் கிண்டலடித்த ஹர்பஜன் சிங்’
க்ரீமிலேயர் வருமான வரம்பு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் 2015 இல் ரூ.20 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்தது.ஆனால் இதைக் கண்டுகொள்ளாமல் 6 லட்சமாக இருந்த க்ரீமிலேயர் வருமான வரம்பை 8 லட்சமாக உயர்த்தி பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை இதன் பயனை அடைய விட முடியாமல் அரசு செய்கிறது.
ஸ்டாலின் கோரிக்கை
ஆகவே, மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும், க்ரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்திட வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமரை வலியுறுத்தி உள்ளார்.