இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஸ்டாலின் – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திமுக கட்சியின் தலைவருமான ஸ்டாலின் இன்று தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளார். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக மக்களை பாதித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி பணிகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். மேலும் தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசியை தானே வந்து செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் கடந்த மார்ச் 9ம் தேதி தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்நிலையில் அவர் இன்று தனது இரண்டாவது டாஸ் தடுப்பூசியும் போட்டுள்ளார்.

ஐபிஎல் விதிமுறைகளை மீறிய இயோன் மோர்கன் – ரூ.12 லட்சம் அபராதம்!!

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் கூறியதாவது, ‘நான் தற்போது கொரோனாவின் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்து விட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here