தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நடத்தி வரும் ஆட்சி மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளனர்.
ஸ்டாலினை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்கள்…
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடிதத்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து இன்றுவரை மிக அழகான ஆட்சியையே நடத்தி வருகிறது. மக்களுக்கு நல்ல னால திட்டங்கள் மற்றும் இலவச திட்டங்கள் என பலவற்றை செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா பேரிடர் காலத்தில் முந்தைய ஆட்சியை விட மிக தெளிவாகவும் அறிவாகவும் செயல்பட்டு கொரோனா பரவலா கட்டுக்குள் கொண்டு வந்தது. அனைத்து துறைகளிலும் சிறப்பான அதிகாரிகள் அமைச்சர்களையே அமர்த்தியுள்ளார் திமுக கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின். அவரின் சிறப்பான ஆட்சியை கண்டு பல கட்சி தலைவர்களும் மற்ற மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் பாராட்டி வருகின்றனர்,
இந்நிலையில் சென்னையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரசின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது, இந்த கூட்டம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு.தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது கூட்டத்தில் தமிழக முதலவர் மு க ஸ்டாலினி சிறப்பான ஆட்சியும் அவரின் செயல்களை பற்றியும் பாராட்டி பேசினார். இவரின் ஆட்சி மென்மேலும் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினர். பின் இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்