தமிழகத்தில் தற்போது ஊரடங்கு போடப்பட்டிருக்கும் நிலையில் சிறுகுறு நிறுவனங்களுக்கு சில சலுகைகளை நிர்ணயித்துள்ளது.
சிறு குறு நிறுவனங்கள்
தமிழகத்தில் கொரோனா பரவல் மிக வேகமாக வருகிறது. அலையை விட இரண்டாவது அலை மக்களையே அதிகமாக பாதித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில் மக்கள் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் பலரும் வேலையில்லாமல் இருக்கின்றனர். தற்போது திமுக ஆட்சியமைத்த இந்த நேரத்தில் நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது, மேலும் ஒரு புதிய சலுகையை சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது சுய தொழில் தொடங்கும் சிறுகுறு நிறுவனங்களுக்காக அரசு 80 கோடி ருபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் இந்த நிறுவனங்கள் முத்திரைத்தாள் பதிவு கட்டணம் செலுத்தவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விலக்கு டிசம்பர் மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தொழில் நிறுவங்களுக்கான மானியங்களை பெறுவதற்கு 25% என்ற நடைமுறை தற்போது 9 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பணியாளர்களுக்கான வரியை செலுத்துவதற்கான கால அவகாசத்தை 3 மாதங்களாக நீடித்துள்ளது. இவ்வாறு கொரோனா பேரிடம் காலத்தில் தமிழக முதல்வர் பல்வேறு சலுகைகளை வெளியிட்டுள்ளார்.