தமிழகத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் தற்போது இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இந்த ஊரடங்கு கடந்த 24ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவித்தார். ஆனால் இதனை தமிழக மக்கள் முழுமையாக கடைபிடிக்கவில்லை. இதன் எதிரொலியாக ஸ்டாலின் அவர்கள் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதன்படி கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு வருகிற மே மாதம் 31ம் தேதி முதல் முடிவுக்கு வருகின்ற சூழலில் தற்போது இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம், வருவாய் துறை, தொழித்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளார்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் தொடரும் கொரோனாவின் தாக்கம் – ஒரே நாளில் 3,847 பேர் பலி!!
இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஏற்கனவே தமிழக முதல்வர் தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறிய நிலையில் இந்த கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த கூட்டத்தின் முடிவில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.