தமிழகத்தில் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் பொழுது அதிமுக கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது இந்த நேரத்தில் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்த தேர்தலை நடத்துவது பெரிய சவாலான ஒன்று. தேர்தல் அதிகாரிகளும் அனைத்து விதமான பாதுகாப்பு பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக தனது பிரச்சர வேலைகளை பார்த்து வருகின்றனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் அதிமுக கட்சி மாத்தி மாத்தி கடுமையாக சாடி வருகின்றனர். தற்போது அந்த வகையில் திமுக கட்சி தலைவர் பிரச்சாரத்தின் ஸ்டாலின் பேசிய போது அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழக அரசு வேலைகளில் பிற மாநிலத்தவருக்கு அதிமுக முன்னுரிமை கொடுக்கிறது.
மத்திய பிரதேச மாநில பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து – தடுப்பு பணிகள் தீவிரம்!!
மேலும் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலையே இல்லை. ஆனால் முதலீட்டாளர்கள் மாநாடு என்று கூறி மக்கள் பணத்தை வீணாக்கி வருகிறது அதிமுக அரசு. அதுமட்டுமல்லாமல் காலிப்பணியிடங்களை நிரப்ப வக்கற்ற பாஜகவின் பினாமி தான் அதிமுக என்று கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்டாலின். மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே திமுகவின் குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.