விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செந்தூர பூவே. இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மணக்கோலத்தில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர். மேலும் சிலர் அவருக்கு திருமணமா என்று குழம்பி போய் உள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் தமிழில் தறி என்ற கலர் தமிழ் சீரியல் மூலம் அறிமுகமானார். இந்நிலையில் இவர் தற்போது விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் கதாநாயகி ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதாவது அந்த சீரியலில்,அன்பு என்பவரை காதலித்து குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார் ரோஜா. மேலும் அவரால் கர்ப்பம் அடைந்து விடுகிறார்.அவர்களின் திருமணத்தை ஏற்க முடியாமல் அன்புவை ரோஜாவின் தாய் மாமா கொலை செய்து விடுகிறார்.
இதையடுத்து அம்மாவின் பாசத்திற்கு ஏங்கும் குழந்தைக்காக வயது அதிகம் இருக்கும் ஊரிலேயே வசதி படைத்த துறை சிங்கம் என்பவருக்கு இரண்டாவது மனைவியாகிறார் ரோஜா. சில சந்தர்ப்பங்கள் மூலம் இந்த உண்மையை அறியும் துரை சிங்கம், முதலில் ரோஜாவை ஏற்க மறுத்து,பின்னர் ரோஜா தனது குழந்தைகள் மீது காட்டும் பாசத்தால் குழந்தைகளுக்காக அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் துரைசிங்கம். இப்படி இருக்க துரைசிங்கத்தை பணத்திற்காக கட்டிக் கொள்ள ஆசைப்படும் ஐஸ்வர்யா துரைசிங்கத்தின் மூத்த மகள் மூலம் பல சதி வேலைகளை செய்து பிரிக்க நினைக்கிறார்.
உங்கள பாக்குறதா…இல்ல அத பாக்குறதா… குழம்பி தவிக்கும் ரசிகர்கள்!!!
இந்த சீரியலில் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் மக்களை ஈர்த்து வருகிறார் ஸ்ரீநிதி. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீல நிற பட்டு புடவையில் நகைகளை அணிந்து கொண்டு ஒரு மணப்பெண் கோலத்தில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அழகே பார்த்து வியக்கும் பேரழகில் இருக்கும் இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வருணித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்