இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதில், முன்னணி வேகப்பந்து வீச்சாளரை எடுத்திருக்க வேண்டும் என ஸ்ரீகாந்த் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்திய அணி தேர்வு
இந்தியா வேர்ல்ட் கப் தொடருக்கான முதல் போட்டியில், பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதனால் இந்த இரு அணிகளும் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு குறித்து பலரும் பல வகையில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனத்தை தொடர்ந்து தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் தற்போது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவர் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் இருக்கும் போதும் அவர்களுக்கு ஏன் அணியில் இடம் கொடுக்க வில்லை. மேலும் “முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு பதில், அக்சர் பட்டேலுக்கு இடம் கொடுத்தது ஏன்” என கேள்வி எழுப்பியுள்ளார். IPL தொடரில் ஷமி 16 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை அசால்ட்டாக வீழ்த்தியுள்ளார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
மேலும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய பிட்ச்களில் விளையாடும் போது அங்கு நல்ல பவுன்ஸ் கிடைக்கும். இது தெரிந்தும் இந்திய அணி தேர்வர்கள் முகமது ஷமியை அணியில் எடுக்கவில்லை. இவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போன்ற தொடர்களில் மட்டும் களமிறக்குவது சரியில்லை. எனவே இனி வரும் T20 போட்டியிலாவது அவரை அணியில் எடுக்க வேண்டும் என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.