பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை .,, தியேட்டரில் திரைப்படம் பார்த்த முன்னாள் பிரதமர்!!

0
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை .,, தியேட்டரில் திரைப்படம் பார்த்த முன்னாள் பிரதமர்!!
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை .,, தியேட்டரில் திரைப்படம் பார்த்த முன்னாள் பிரதமர்!!

நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தியேட்டரில் திரைப்படம் பார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் நியூஸ்:

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறினர். பின்னர் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இருந்தும் இலங்கை விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம்.., இணையத்தில் லீக்கான முக்கிய ஆடியோ?? உண்மை வெளிவருமா??

இந்நிலையில் இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று தனது மனைவியுடன் கொழும்பில் உள்ள தியேட்டர் ஒன்றில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் பார்த்துள்ளார். அதற்கான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே இதுகுறித்த எந்த கவலையும் இல்லாமல் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார் என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். அதாவது மகிந்த ராஜபக்சே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு திரும்பி உள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here