அண்டை நாடான இலங்கையில், நிலவி வரும் கடும் மின்வெட்டு காரணமாக, ஏப்ரல் 4ஆம் தேதி முதல் அந்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடுமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலாடையை கழட்டி விட்டு.., முன்னழகு அப்பட்டமாக தெரியும்படி பதற வைத்த பூனம் பாஜ்வா – திணறிய இளசுகள்!!
மூடப்படும் பள்ளிகள்:
நம் அண்டை நாடான இலங்கையில், தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு பொருளாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட வன்முறை காரணமாக, இலங்கையின் தலைநகர் கொழும்புவில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில், அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். கடந்த சில, நாட்களாக அங்கு மின்வெட்டு பிரச்சனையும் எழுந்துள்ளது.
இந்த கடும் மின்வெட்டு காரணமாக, இலங்கையிலுள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் மூடுமாறு, அந்நாட்டின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. பள்ளி இறுதி ஆண்டு விடுமுறை காலம், வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே பள்ளிகளை மூட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த, அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்