இலங்கையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இலங்கை அரசு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்துள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்று பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அதிகரிக்கும் தொற்றால் பல உலக நாடுகள் தொற்று பரவலின் வேகத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அரசு செப்டம்பர் 21 ஆம் தேதி வரை அமலில் இருந்த ஊரடங்கை அக்டோபர் 1 ஆம் தேதி வரை நீடித்துள்ளது.
இந்த ஊரடங்கு குறித்த இறுதி முடிவு அந்நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இலங்கையில் நேற்று மட்டும் புதிதாக கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 12,000 ஐ நெருங்கி பதிவாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 700 ஆக இந்த இறப்பு எண்ணிக்கை இருந்ததது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே உலகின் பிற நாடுகளில் மிக ஆபத்தான கொரோனவாக கருதப்படும் C1.2 மற்றும் Mu வைரஸ் வேறு கண்டறியப்பட்டுள்ளதால் அந்நாட்டில் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்க சுகாதார அதிகாரிகள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அக்டோபர் 1 வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்