சமீபகாலமாக இந்தியாவில் டெல்லி, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பூமிக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால், அந்த அதிர்வு அண்டை மாநிலங்களிலும் உணரப்படுகிறது. அப்போது பொதுமக்கள் பலரும் தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேறி அச்சத்துடன் சாலைகளில் குவிந்து விடுகின்றனர். இந்த நிலையில் இலங்கை அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது இன்று (நவம்பர் 14) மதியம் 12.31 மணியளவில் இலங்கை கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1326 கி.மீ. தொலைவில் 10 கி.மீ,. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6.2 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இலங்கையின் கொழும்பு நகரில் அதிகம் உணரப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான சேத விவரங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.