இலங்கையில் தற்போது நிலவும், அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிபர் மாளிகை உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு:
நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த சில தினங்களாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நாட்டில் நிலவி வரும் பொருளாதார, அசாதாரண சூழ்நிலைகளால் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. நாட்டின் புதிய பிரதமராக, ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ள நிலையில் நகரின் ஆங்காங்கே தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், நாட்டின் முக்கிய பகுதிகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்நாட்டு அதிபர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனால் தொடர்ந்து, அங்கு பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்