நாட்டில் ஆகஸ்ட் 14 வரை அவசரநிலை பிரகடனம் – அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
நாட்டில் ஆகஸ்ட் 14 வரை அவசரநிலை பிரகடனம் - அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனம் ஆகஸ்ட் 14 வரை அமலில் இருக்கும் என்று அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங் தெரிவித்துள்ளார்.

அவசரநிலை பிரகடனம்:

இலங்கை வரலாற்றில் இதுவரை யாரும் கண்டிராத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதற்கு காரணம் பிரதமர் மற்றும் அதிபர் தான் என்று மக்கள் அவர்கள் பதவியை ராஜினாமா செய்யுமாறு போராட்டத்தை தொடங்கினர். இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங் ஜூலை 19 அன்று இலங்கையில் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார்.

அதன்பிறகு நடந்து முடிந்த தேர்தலில் அதிபராக ரணில் விக்ரமசிங் பதவியேற்றார். இந்நிலையில் இலங்கையில் அமலில் இருக்கும் அவசர நிலை பிரகடனம் ஆகஸ்ட் 14 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங் அறிவிப்பு விடுத்துள்ளார். மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டு அதிபர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here