பள்ளி மாணவர்களுக்கு வந்த மோசமான  நிலை.., பெரிய சவாலை சந்திக்கும் அரசு! பெற்றோர்கள் வேதனை!!

0
பள்ளி மாணவர்களுக்கு வந்த மோசமான  நிலை.., பெரிய சவாலை சந்திக்கும் அரசு! பெற்றோர்கள் வேதனை!!

நாடு முழுவதும் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால், அவதிப்படும் அபாயம் உருவாகி இருப்பதாக, அந்த நாட்டு கல்வியாளர்கள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுக்கு எச்சரிக்கை:

நம் அண்டை நாடான இலங்கையில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை, பல மடங்கு எகிறியுள்ளது. இந்த, பிரச்சனையை சரி செய்ய  அந்நாட்டு அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், நிதிச் சுமை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

நீண்ட இழுபறிப்புக்கு பின் இந்த திட்டம் தற்போது மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. இந்தப் பிரச்சனையால், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது திட்டத்தை தொடர  அரசு ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை எனவும், இதற்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் உள்ள நாடுகளில், இலங்கை 6வது இடத்தில் இருப்பது கவலை அளிப்பதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையை உடனடியாக சரி செய்ய வேண்டிய கட்டாயம் தற்போது இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here