அரசின் ஷாக் நியூஸ் – ஓய்வு வயது குறைப்பை தொடர்ந்து அடுத்த அடி! பாதி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு!!

0
அரசின் ஷாக் நியூஸ் - ஓய்வு வயது குறைப்பை தொடர்ந்து அடுத்த அடி! பாதி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு!!

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்காக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறைப்பையடுத்து, பாதி பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

அரசு முடிவு:

நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த சில மாதங்களாக பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய, அண்மையில் பதவியேற்ற விக்கிரம சிங்கே தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாக, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 65 இலிருந்து 60 ஆக குறைப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களை பாதியாக குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது நாடு முழுவதும், 16 லட்சம் அரசு ஊழியர்கள் இருந்து வருகின்றனர். இவர்களில், 6.72 லட்சம் பேர் அரசின் ஓய்வூதியம் பெறுகின்றனர். இதனால், மாதம் அரசுக்கு 75% செலவு ஏற்படுகிறது.

கருத்தில் கொண்டு, 15 லட்சமாக உள்ள ஊழியர்கள் எண்ணிக்கையை 10 லட்சமாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சரிவர பணி செய்யாத ஊழியர்களை, வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து பேசிய பொருளாதார வல்லுநர்கள், இந்த ஆண்டு இறுதியில் 20,000முதல் 25,000 வரையிலான அரசு ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கணித்துள்ளனர். இந்த செய்தி அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here