ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணிக்கு எதிராக RCB யின் தோல்வியை எதிர்பார்த்து CSK மற்றும் LSG அணிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
RCB:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16வது சீசன் தற்போது, பிளே ஆப் சுற்றுக்கான ரேஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் பிளே சுற்றுக்கு தகுதி பெறும். இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 13 போட்டிகளில் 9 ல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதையடுத்து, மீதமுள்ள 3 இடத்தை பிடிப்பதற்கான போட்டிகள் தான் தற்போது ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த வகையில், CSK அணிக்கு 45% மும், LSG அணிக்கு 40% மும், MI அணிக்கு 10%-மும் மற்றும் RCB அணிக்கு 5% பிளே சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
தமிழக மக்களே உஷார்.., இனி 12 முதல் 3 மணி வரை வெளியே செல்ல தடை.., பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!
மேலும், இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்து கொள்ளும் நோக்கத்துடன் மோத உள்ளது. ஒரு வேளை RCB அணி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தால், CSK மற்றும் LSG ஆகிய இரு அணிகள் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், CSK மற்றும் LSG அணிகளின் ரசிகர்கள் RCBயின் தோல்வியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.