ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உரிமை உள்ளது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

0

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் உரிமைகளை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

கோயிலில் முறைகேடு..!

18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் பாரம்பரியமாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன, நகைகளைப் பராமரிப்பதிலும் நிதி நிர்வாகத்திலும் ஏரளமான முறைகேடுகள் நடக்கின்றன என்று கூறி கேரள ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட் 2011ம் ஆண்டு, ஜனவரி 31ம் தேதி அளித்த தீர்ப்பில், “ கோயில் நிர்வாகத்தையும், சொத்துக்கள் நிர்வாகத்தையும் கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் எனவும் கோயிலின் பூஜை, விழாக்கள் போன்றவை வழக்கம்போல், பாரம்பரிய முறைப்படியே நடத்த வேண்டும் அதில் மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 2011ம் ஆண்டு மே 2ம் தேதி கேரள ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்தியாவிலேயே நடப்பு நிதியாண்டில் அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழகம் – அதிர்ச்சி தகவல்..!

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!

இந்த பணிக்கு உதவுதவற்காக வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. அவரின் மேற்பார்வையில் இதுவரை ஏ முதல் எப் வரை 5 பாதாள அறைகள் திறந்து மதிப்பிடப்பட்டுள்ளன. இதில் கோயில் நிலவறையி்ல் உள்ள பி பாதள அறையை மட்டும் திறக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. அந்த அறையில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்றும், திறந்தால் மன்னர் குடும்பத்துக்கு ஆபத்து என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தததால் அந்த அறை திறக்கப்படவில்லை. அந்த அறையை மறு உத்தரவு வரும்வரை திறக்கக்கூடாது என்று கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

மேலும் கோயிலை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதுபற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதன் அடிப்படையில், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயிடம் கோயில் சொத்துகளை தணிக்கை செய்யும் பொறுப்பை சுப்ரீம் கோர்ட் ஒப்படைத்தது. அதன்படி 2004ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கணக்குகளை வினோத் ராய் கமிட்டி தணிக்கை செய்தது. தணிக்கையை முடித்து, ஆயிரம் பக்க அறிக்கையை 5 பகுதிகளாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here