மறைந்த தனது அம்மா ஸ்ரீ தேவியை நினைத்து மகள்கள் உருக்கம் – கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்!!

0
மறைந்த தனது அம்மா ஸ்ரீ தேவியை நினைத்து மகள்கள் உருக்கம் - கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்!!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் வெளியிட்ட போட்டோக்கள் ரசிகர்களை கண்கலங்க செய்துள்ளது.

உருக வைக்கும் போட்டோ:

கோலிவுட், பாலிவுட் என அனைத்து திரைகளிலும், முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் ஸ்ரீதேவி. இயக்குனர் பாலச்சந்தரின், மூன்று முடிச்சு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், 16 வயதினிலே படத்தின் மூலம் மிகப் பெரிய  பெயரை சம்பாதித்தார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் முடித்த இவருக்கு, ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு, நடிகை ஸ்ரீதேவி தனது குளியல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், மறைந்த தங்களது அம்மா ஸ்ரீதேவியின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் உருக்கமான போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். மேலும், உங்களை எப்போதும் மிஸ் செய்கிறோம் அம்மா என கண்ணீருடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளனர். இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் கண் கலங்கி போய் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here