தமிழகத்தில் பல பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டதற்கு மின்தடைக்கு அணில் தான் கரணம் என மிக நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
மருத்துவ மாணவி மரணம் …! – கேரளாவில் அரங்கேறிய கொடுமை !!!
மின்தடைக்கு அணில்தான் காரணம்
தமிழகத்தில் இருக்கும் தீரா பிரச்சனைகளில் ஒன்று மின்தடை. திமுக ஆட்சி அமைத்தால் மின்தடையே இருக்காது என பிரச்சாரத்தின்போது பிரச்சார கூட்டத்தில் கூறினார்கள். அதுமட்டுமில்லாமல் கொரோனா ஊரடங்கின்போதும் மின்தட்டுப்பாடு இருக்காத. திமுக ஆட்சி அமைத்த 10 நாட்களில் மின்சார வசதியும் மின்தடையும் சரி செய்யப்படும் என கூறினார்கள்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் இந்நிலையில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இப்பொழுது பொறுப்பேற்றுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது துறையை சரியாகவும் முழுமையாகவும் கவனிக்காமல் இருந்து வருகிறார். அதனால்தான் மின்தடை ஏற்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் அதிமுக அரசு இதற்குமுன் மின்வாரியத்தை சரியாகப் பராமரிக்கவில்லை என்று காரணம கூறியுள்ளார் மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு அணில் தான் கரணம் என அவர் கூறியுள்ளார். மின்சாரா வயர்கள் செல்லும் வழிகளில் செடி வளர்ந்தும் மின்சார கம்பி மீது அணில்கள் ஓடுவதினால் கம்பிகள் உரசி பழுதாகிறது என
இதனால் தான் மின் தடை ஆகிறது என கூறியுள்ளார். மின்தடைக்கு அணில் தான் காரணம் என கூறிய செந்தில் பாலாஜியின் கருத்து நெட்டின்சன்கள் மத்தியிலும் ட்விட்டர் பக்கத்திலும் பெருமளவில் வைரலாகி வருகிறது. இவரின் பதிவுக்கு பலரும் பதிலளித்தும் ஹாஸ்டேக் ட்ரெண்டிங் மற்றும் மீம் கிரீயேட் செய்தும் வருகின்றனர்..