தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் கலைத்திறன், விளையாட்டு போன்றவற்றிலும் சாதிக்க அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கொரமண்டல் நட்சத்திர விடுதியில் சர்வதேச விளையாட்டு அறிவியல் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

TNTET தேர்வர்களே…, இது ரொம்ப முக்கியம்…, வெளியான முக்கிய அறிவிப்பு!!
இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் விளையாட்டு துறைக்கென தனி கொள்கைகள் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் மாநிலமாக மட்டுமல்லாமல் சர்வதேச அரங்கில் வெற்றி பெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும். அதற்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.