கொரோனா ஊரடங்கு காலத்தில் போதுமான ரயில் பயணிகள் இல்லாததால் 25 சிறப்பு ரயில் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் பரவலை கருத்தில் கொண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் ரயில் சேவை மீண்டும் துவக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக வழக்கமான ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
இருப்பினும் அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக திரும்பவில்லை. தற்போது ஜூன் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கட்டுள்ள நிலையில் போதிய பயணிகள் வருகை இல்லாததால் 25 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதில் முக்கியமாக சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயில் ஜூன் 18, 20, 25, 27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி – புதுச்சேரி, ஈரோடு – சென்னை சென்ட்ரல், நாகர்கோவில் – கோயம்புத்தூர், சென்னை எழும்பூர் – கொல்லம் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்