இந்தியாவில் அனைத்து துறைகளிலும் பெண்களை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று (செப்டம்பர் 18) மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சட்டப்பேரவையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதைத்தொடர்ந்து இன்று (செப்டம்பர் 19) நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த மசோதா மீதான விவாதங்களும் நாளை நடத்தப்பட்டு, நாளை மறுநாள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்ட இலங்கை கடற்படையினர்…, பதறிப்போன தமிழக மீனவர்கள்!!