தமிழகத்தில் சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரியாக செந்தில்குமாரரை நியமித்துள்ளனர் .
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருடன் திடீர் சந்திப்பு!!!
சுகாதார துறை”க்கு சிறப்பு அதிகாரி:
தமிழகத்தில் தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அரசு அதிகாரிகளும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதனை பின்பற்றும் வகையில் தற்போது ஆட்சி அமைத்துள்ள திமுக தனது அரசியல் அதிகாரிகளுக்கு பணி நியமனம் செய்து வைத்துள்ளது. ஆனால், சுகாதாரத்துறை செயலாளர் பதவி மட்டும் ராதாகிருஷ்ணனே தொடர்கிறார்.ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்ததால் ராதா கிருஷ்ணன் பதவி பறிக்கப்பட்டுவிடுமோ என்று பலரிடம் கேள்வி எழுந்தது. தற்போதைய கொரோனா பிரச்சனை தடுப்புகளை சிறப்பாக கையாண்டு வருகிறார் ராதாகிருஷ்ணன்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போதைய கொரோனா தொற்று பாதிப்பு, விளைவுகள், தாக்கங்கள் குறித்து முழுமையாக அறிந்த ராதாகிருஷ்ணனை, திமுக அரசு மாற்றம் செய்யவில்லை.இந்நிலையில்தான், கடந்த வாரம் அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.அதில், சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரியாக செந்தில்குமாரரை நியமித்துள்ளது. இவரை அடுத்த சுகாதார செயலாளராக மாற்றம் செய்யவிருப்பதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.கொரோனா 2ஆம் அலையின் பிரச்சனை ஓரளவு முடிந்ததும், ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக, சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்க திமுகவுக்கு யோசனை இருக்கிறதாம். இப்போது சிறப்பு அதிகாரியாக வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தற்காலிகம் என்றும், 2 மாசத்திற்கு பிறகு, அநேகமாக இவருக்கு, சுகாதாரத்துறை செயலாளர் பதவி தரப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.