தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கு சிறப்பான பயிற்சி அளிக்க, பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு பயிற்சி:
இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு முதல் இந்த நீட்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில், நீட் நுழைவுத் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் தமிழக அரசு, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதுவரை நீட் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதால். அரசுப் பள்ளி மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு அரசால் நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அரசால் வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கும்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இருப்பினும் நடப்பாண்டில் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு, (அக்டோபர்) அடுத்த மாதமே நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு மாணவர்கள் மத்தியில் ஒருவித நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.