தமிழக மின் பயனர்கள் கவனத்திற்கு – கால கெடுவுடன் வெளியான முக்கிய அறிவிப்பு! அரசு உத்தரவு!!

0
தமிழக மின் பயனர்கள் கவனத்திற்கு - கால கெடுவுடன் வெளியான முக்கிய அறிவிப்பு! அரசு உத்தரவு!!
தமிழக மின் பயனர்கள் கவனத்திற்கு - கால கெடுவுடன் வெளியான முக்கிய அறிவிப்பு! அரசு உத்தரவு!!

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மின்வாரிய அலுவலங்களிலே நடைபெறும் என மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மின்வாரிய துறை

தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சம் மின் இணைப்புகளும், 22 லட்ச விவசாய மற்றும் 11 லட்ச குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு வலியுறுத்தியதை அடுத்து கிராம மற்றும் நகர்ப்புற மக்கள் அனைவரும் இன்டர்நெட் மையங்களை நாடி ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இந்த அவல நிலையை போக்கவும் பொதுமக்களின் நலன் கருதியும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் உண்டு. அதுவரை இயல்பை போல மின் கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போது ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின்வாரிய அலுவலகத்தில் டிசம்பர் 31 ந் தேதி வரை காலை 10.00 மணி முதல் மலை 05.15 மணி வரை நடைபெறும். பண்டிகை நாட்கள் தவிர ஞாயிற்றுக் கிழமைகளிலும் முகாம் செயல்படும்.

மது பிரியர்களுக்கு ஷாக்., மதுக்கடை திறக்கும் நேரம் குறைப்பு.., உயர்நீதிமன்றம் பரிந்துரை!!

இதனால் 34 நாட்கள் கால அவகாசத்துடன் தாமதமின்றி கிராம மற்றும் நகர்ப்புற மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதளத்திலும் சென்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். இவ்வாறு நீங்கள் ஆதார் எண்ணை இணைத்தால் உடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு உறுதி செய்யப்பட்ட குறுஞ்செய்தி வருவதை வைத்து சரி பார்த்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here